Monday, February 28, 2011

ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧ (2011)

பேரன்புடையீர்,

வருகின்ற மார்ச் 17 மற்றும் 18 ம் தேதிகளில், ஸௌராஷ்டிரா கல்லூரி, மதுரையில், ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧ (2011) எனும் ஸௌராஷ்டிரா மொழி பட்டறையை அமைத்துள்ளோம்,

பட்டறையில், 1500 ஆண்டு முதல் 2011, உள்ள ஸௌராஷ்டிரா இலக்கியத்தின் வளர்ச்சி, மற்றும் மிக எளிமை வாய்ந்த ஸௌராஷ்டிரா எழுத்துக்களின் எழுத்துப் பயிற்சி மற்றும் நூறு ஆண்டுகளுக்கு முன் உள்ள படைப்புகளின் கண்காட்சி (அனுமதிக்கு பின்) ஆகிய நிகழ்வுகள் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம்,

தாய்மொழி, கல்வித் தகுதி, தொழில், ஆகிய எந்த வரைமுறைகளுக்கும், உட்படுத்தாமல், விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக பட்டறை அமைக்கப்பட்டுள்ளது,

பட்டறையில் கலந்து கொண்டு தங்களின் மேலான, ஒத்துழைப்பினை நல்கி, ஸௌராஷ்டிரா மொழியினை அழிவிலிரிந்து மீட்டெடுக்க பேருதவி புரியுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்,


மேலும் விவரங்களுக்கு: http://markandaysureshkumar.blogspot.com/



Thank to Mr.மார்கண்டேயன்