Monday, December 12, 2011

IRUNELVELI VEERAVANALLUR HARI KATHA SAKKARAVARTHI THIRUMURUGA GIRUBANANTHAVARI PIRATHI OLI PUGAL K.S. AYYA BHAGAVATHAR OBITUARY

வீரவநல்லூர் K.S. அய்யா பாகவதர் திருவுள்ளம்

பல்வேறு கிராமங்கள், நகரங்கள், பெரு நகரங்கள் ஆகியவற்றில், கோவில் விழாக்களில், திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் பிரதி ஒலி புகழாக திகழ்ந்த, அரசின் நலிவுற்ற கலைஞராம், மஹா பாரத பண்டித பூரண வசனதிலகம் - ஹரி கதா சக்ரவர்த்தி எனப் பலராலும் பாராட்டப்பெற்று, வீரவநல்லூர், புதுக்குடி, மதுரை, பரமக்குடி, புளியரை, சங்கரன்கோவில், பண்பொழி போன்ற ஊர்களில் வருடந்தோறும், ஸ்ரீ திரௌபதை அம்பாள் சமேத ஸ்ரீ அர்ச்சுனர் திருக்கோவில்களில், தனக்கே உரித்தான ”மணியாட்டி மஹாபார உபன்யாசம்” மூலம் பாரதக் கதை முழுவதும் 10 நாள் நிகழ்வாக ஆண்டு தோறும் நடத்தி பெருந்திரளான மக்கள் மனதில் வசமாகத் திகழுகின்ற,

வீரவநல்லூர் தெய்வத்திரு K.S. அய்யா பாகவதர் அவர்கள், வீரவநல்லூர் ஸ்ரீ பாலகிருஷ்ண சங்கீத சபா ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்து, ஸ்ரீ பாலகிருஷ்ணசபாவுடன் இணைந்த பல்வேறு திருப்பணிகளிலும், வீரவநல்லூர், கிளாக்குளம், புதுக்குடி மற்றும் வெள்ளாங்குளி ஆகிய ஊர்களிலும், இதர பிற சௌராஷ்ட்ரர்கள் வாழுகின்ற ஊர்களிலும் உள்ள கோவில்களின் திருப்பணிகளுக்காக, இறையருளைப் பிரார்த்தித்துப் பாடி, உரிய கனதனவான்களை சந்தித்து நிதிபெற ஊக்கம் தந்த தெய்வத் தொண்டுள்ளம் நிறைந்த அன்னார்,

இன்று அதிகாலை 06-12-2011 அன்று திருவுள்ளம் அடைந்தார்கள்...
அன்னவர் ஆன்மா நிலைத்த இறையருளைப் பெற நாம் துதிப்போம். நன்றி.

குறிப்பு நம் சமூக மக்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர் ஆதலால் தயவு செய்து அவரவர்களுக்கு அறிமுகமானவர்களிடம் முடிந்தால் சுற்று செய்யவிரும்புகிறோம்.நன்றி.

இவண்.
வீரவநல்லூர் சௌராஷ்ட்ரா சமூக பொதுமக்களுடன்,
வீரவநல்லூர் சௌராஷ்ட்ரா சமூக கல்வி வளர்ச்சிக் அறக்கட்டளை உறுப்பினர்கள்.

2 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Veerai Blog said...

Know more about Veeravanallur...